Sunday, April 21, 2013

ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய 7 பருவங்கள் (தமிழில் . . .)


ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய சப்த பருவங்கள் உண்டு. இந்த 7 பருவங்களுக்கும் நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் இனிமையான பெயர்கள் உண்டு. அந்த பெயர்களை வயதிற்கேற்ப கீழே காணலாம்.

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது  வரையிலான பருவம் பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது  முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் -  காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் -  முதுமகன்

பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
*  9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

No comments:

Post a Comment