Thursday, October 25, 2012

கண் மை





நம் நாட்டில் இயற்க்கை பொருட்களால் தயாரிக்கப்படும், கண் மை இடும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. அதற்க்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களின் அழகு சாதன பொருட்களை மக்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். வெளி நாட்டு நிறுவன பொருட்களுக்கு நான் எதிரி அல்ல. ஆனால் நம் நாட்டு இயற்க்கை பொருட்களின் மதிப்பு என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கண் மை, குழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்கவும், பெண்களின் கண்ணழகை அதிகப்படுத்தி காட்டவும் உபயோகிக்கப்படுகின்றன.
 இதில் மேலும் பல மறைக்கப்பட்ட நன்மைகள் இருக்கின்றன.
 கண் மை, இட்டுக் கொண்டால், பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.
செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் மற்றும் பல தீய சக்திகளால் பாதிக்க பட்டவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த கண் மையை, நெற்றி பொட்டில் இட்டுக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பல் வேறு விதமான் தீய சக்திகளிடம் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம் உடலில் தீய சக்திகள் இருந்தாலும் அதை இந்த கண் மை வெளியேற்றி விடும்.

No comments:

Post a Comment